Thursday, 27 April 2017

துணிவு

துணிவுடன் நீ வாழ்ந்து பாரடா தம்பி !
உலக வாழ்க்கையில் அச்சம் இல்லடா தம்பி  !
துணிவுடன் இருந்தால் சாதனை
இல்லையேல் உனக்கு வேதனை

துணிவு கொள் தம்பி !
உன்னை நீ நம்பி !
துணிவோடு நீ நடைபோடு !
வெற்றி வரும் உன்னோடு !

ஆக்கம் :
ஜெக்சன் ராஜ் த/பெ சந்தியாகு
ஸ்ரீவன் ராஜ் த/பெ முருகையா
திபாகர் த/பெ இரகு
லெத்திஷா த/பெ செவியர்

ஆண்டு 4

Saturday, 15 April 2017

மாணவர்களின் சித்திரை புத்தாண்டு கவிதை படைப்புகள்

நாம் நினைப்பது நன்றானால்
நடப்பது நன்றாகும்
முடிந்ததை மறப்போம்
நடப்பதை நினைப்போம்

அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் !
அன்புடன்
தனுஷ் ரூவின் - ஆண்டு 6



வருக! வருக! 
சித்திரை புத்தாண்டே

வாழ்த்தி வருக!
சித்திரை புத்தாண்டே
இயற்கை சித்திரை புத்தாண்டே 
மானிடருக்கு மகிழ்ச்சி தரும் 
சித்திரை புத்தாண்டே
அனைவருக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும்
சித்திரை புத்தாண்டே

அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் !
அன்புடன்
கு.யுஷாலினி - ஆண்டு 5




சித்திரை புத்தாண்டு பிறந்ததாம்....
கோவிலுக்குச் செல்லலாம்.....
புது புது ஆடைகளை அணியலாம்....
மகிழ்ச்சியாக இருப்பதைக் காணலாம்...

அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் !
அன்புடன்
கு.தண்மதி சின்னம்மா - ஆண்டு 2






கோபம் அடங்கட்டும்
பயம் விலகட்டும்
மகிழ்ச்சி பெருகட்டும்
ஒற்றுமை வளரட்டும்
பெருமை கிடைக்கட்டும் !

அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் !
அன்புடன்
இ.திபாகர் - ஆண்டு 4


என் மகிழி

                 ஓய்வு நேரத்தை நல்ல வழிகளில் கழிக்க உதவுவது மகிழி. என் மகிழி கதைப் புத்தகம் வாசிப்பது ஆகும். கதைப் புத்தகம் வாசிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. ஓய்வு நேரத்தில் கதைப் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் நம் வாசிப்புத் திறன் வலுப்படுகிறது. மேலும், வாசிப்பதன் மூலம் சொல்வளம் பெருகுகிறது. புதிய சொற்களைத் தெரிந்து கொண்டால், நாம் கட்டுரை எழுதும் போது சுலபமாக இருக்கும்.
         நான் ஓய்வு நேரத்தில் கதைப் புத்தகம் வாசிப்பேன். பள்ளி நூலகத்தில் இருக்கும் கதைப் புத்தகங்களை இரவல் பெறுவேன். அந்தப் புத்தகங்களை ஓய்வு நேரத்தில் படிப்பேன். உறங்கப் போவதற்கு முன்பும் நான் கதைப் புத்தகங்களை வாசிப்பேன்.
         நான் வாசித்த கதைகளையும் அதில் உள்ள நல்ல செய்திகளையும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வேன். என் நண்பர்களையும் கதைப் புத்தகங்களை வாசிக்கச் சொல்வேன்.
         கதைப் புத்தகம் வாசிப்பதன் மூலம் நம்முடைய நேரத்தை நல்ல முறையில் கழிக்க உதவும். ஆகவே, கதைப் புத்தகங்களை வாசித்து ஓய்வு நேரத்தை நல்வழியில் கழிக்கலாம்.

ஆக்கம்
தண்மதி சின்னம்மா த/பெ குணசேகரன்
ஆண்டு 2